ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலாக பணிப்புறக்கணிப்புக்கு செல்வோம்: சுகாதார தொழில் நிபுணர் சங்கம்
கோவிட் சட்டத்தை கோவிட் கட்டுப்பாடு என்ற பெயரில் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்தால், ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குமுதேஷ் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரச சேவையின் செயல் திறனை அதிகரிப்பது சம்பந்தமாக வரவு செலவுத்திட்டத்திற்குள் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகள் முரணானவை.
ஓய்வுபெறும் வயது 65 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் வழமையாக ஓய்வுபெறுவோருக்கு 10 ஆண்டுகளுக்கான ஓய்வூதியம் கிடைக்காது போகும் அடையாளங்கள் தென்படுகின்றன.
அரச சேவையின் ஊதிய முரண்பாடுகள், சுகாதார ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் சம்பந்தமாக வரவு செலவுத்திட்டத்தில் தீர்வுகள் இல்லை.
ரணுக்கோவின் அரச ஊழியர்களுக்கான ஊதிய பரிந்துரைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன எனவும் ரவி குமுதேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri