மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டி பாதுகாப்பாக மீட்பு (video)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரோல் தோட்டத்திலுள்ள குடியிருப்பு ஒன்றின் மலசலகூடத்தில் நான்கு மாத சிறுத்தைக்குட்டி ஒன்று காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (26.02.2023) பதிவாகியுள்ளது.
தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு மலசலகூடத்திலே குறித்த சிறுத்தை குட்டி காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டி
எனவே சிறுத்தையை அங்கிருந்து மீட்பதற்காக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசி அதிகாரிகள் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு, காட்டு பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை ஹெரோல் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் அத்தோட்டத்தில் உள்ள நாய்கள் சிறுத்தைகளால் வேட்டையாடப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
