காணி கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த சட்ட ஆலோசனை
வடக்குபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில் இன்று வெள்ளிக்கிழமை (02) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 28. 03. 2025 திகதி இடப்பட்ட வர்த்தமானிலே மேற்படி ஏக்கர் காணியினை மூன்று மாதத்திற்குள் உரிமை கோரப்படாதவிடத்தில் அரச காணியாக அபகரிக்கப்படுமென வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழ். மாவட்டத்திலே 3669 ஏக்கர் காணி கபளீகரம் செய்யப்பட உள்ளதாகவும் இது வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குவதனால் மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கலும் , எதிர் மனு விண்ணப்பம் முழுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை சட்டத்தரணிகள் குழாம் முன்னெடுத்திருந்தது.
மக்களுக்கான ஆலோசனை
இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்ட பத்து சட்டத்தரணிகள் கலந்துகொண்டு மக்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இன் நிகழ்வு வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட வெற்றிலைக்கேணியில் இடம்பெற்றது.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
