யாழில் மீன் சந்தை வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை(Photos)
கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவி பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று கல்வியங்காடு மீன்சந்தையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வியாபாரத்திற்கு பயன்படுத்த முடியாத கருவிகள்
அங்கு வியாபார நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்படாத, வியாபாரத்திற்கு பயன்படுத்தமுடியாத 13 நிறுக்கும் கருவிகளை வியாபாரிகள் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக
சட்ட திணைக்களத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
