ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் வாரத்தினையொட்டி, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எம். எஸ். நசுருதீன் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில், இன்று(30) டெங்கு கட்டுப்பாட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு
இதன்போது வீடுகள், அரச கட்டடங்கள் உட்பட, 589 இடங்கள் இன்றைய தினம் பரிசோதிக்கப்பட்தோடு, அதில் எட்டு இடங்களில், டெங்கு குழம்பி இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில், ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரியில் இருந்து இன்று வரை கிண்ணியா பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 164 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
