அமெரிக்க விஜயத்தை ஒத்திவைத்த லெபனான் பிரதமர்
லெபனான் பிரதமர் நவாப் சலாம் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான தனது முக்கியமான பயணத்தை திடீரென ஒத்திவை வைத்துள்ளார்.
இது குறித்து தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டில் நிலவும் தற்போதைய உள்நாட்டுச் சூழல்களைக் கருத்தில் கொண்டு, பெய்ரூட்டிலிருந்து அரசாங்கப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், வரும் நாட்களில் பிரதமர் சலாம் வாஷிங்டன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம் தற்போது அமலில் உள்ள போதிலும், லெபனானில் உள்ள ஹிஸ்பொல்லா இலக்குகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவதால் அங்கு பதற்றம் குறையவில்லை.
இத்தகைய சூழலில், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு எதிராக உள்நாட்டில் ஹிஸ்பொல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நாட்டின் பாதுகாப்பையும் நிர்வாகத்தையும் உறுதிப்படுத்த பிரதமர் பெய்ரூட்டிலேயே தங்க முடிவு செய்துள்ளார்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam