கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 251 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 251 பாடசாலை
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு படை பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் மகா வித்தியாலயத்தில் இன்று (10.08.2024) நடைபெற்றுள்ளது.
கற்றல் உபகரணங்கள்
இதன்போது, பூநகரி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 2024 ஆண்டில் தரம் 05 புலமைப் பரிசில் பரிட்சைக்குதோற்றவுள்ள 251 மாணவர்களுக்கே குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், கிளிநொச்சி பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் 55ஆவது படைப்பிரிவினுடைய கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள் பூனகரி பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய அதிகாரி பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.