இலங்கையில் பதிவான கோவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களில் 69 வீதமானவர்கள் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்தின் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையில், கொரோனா தொற்றால் இறப்பவர்களில் 31% பேர் ஒரு டோஸ் அல்லது ஊசி போட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொரோனா இறப்புகளில் 77 வீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும், 1.2வீதம் 30 வயதுக்குட்பட்டவர்களிடமும் இருப்பதாக அவர் கூறினார்.
அனைத்து இறப்புகளில் 81 வீதம் ஏதேனும் ஒரு வகையான நாள்பட்ட நோயின் காரணமாக இருப்பதாக அவர் கூறினார்.