இன்னும் ஒரு வருடத்தில் எந்த நாட்டு உரமும் எமக்கு தேவையில்லை - காணி அமைச்சர்
நாம் இப்போது சேதன பசளை உற்பத்தி செய்து வருகின்றோம், இன்னும் ஒரு வருடத்தில் எந்த நாட்டு உரமும் எமக்கு தேவையில்லை எமது நாட்டிலே தேவையான உரத்தைத் தயாரிக்க முடியும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன (S.M.Chandrasena) தெரிவித்துள்ளார்.
சேதனப் பசளை தயாரிக்கும் இடம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று பி.ப. 4.30 மணிக்கு சந்திவெளியில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நான் சந்தோசம் அடைகின்றேன். எமக்கு இரு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மட்டக்களப்பில் இருக்கின்றார்கள்.
எமது ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்ப மிகவும் பாடுபடுகிறார். சேதன பசளை உரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முதலாவது காரணம் எமது மக்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இன்று எமது மக்கள் சிறுநீரக நோய் மற்றும் பல நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை வைத்தியசாலை வரவு ஏட்டில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
வடக்கு, கிழக்கைத் தவிர மற்ற மாவட்டங்களில் சேதன பசளை நடைமுறையில் இன்னும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.


மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam