டெல்லியில் அவசரமாக ஒன்றுகூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்
டெல்லியின் இன்று மாலை இந்தியா கூட்டணி தலைவர்கள் அவசரமாக கூட உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா கூட்டணியின் அவரச ஆலோசணை கூட்டம் இன்று மாலை கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இவர்களது கூட்டணியில் இணைவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது கூடும் அவசர ஆலோசணை கூட்டத்தில் மேலும் சில முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலானது முடிவுகளுக்கு பிறகும் ஆச்சர்யங்களை ஒழித்து வைத்திருக்கும் என இந்தியாவின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)