விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு! புலம்பெயர் நாடுகளில் பலருக்கு ஆபத்து(Video)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கின்றார் என்ற கருத்து ஒரு அச்சமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என கொழும்பின் மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இந்தியாவின் இந்த அறிவிப்பு காரணமாக,பலவிதமான அச்சுறுத்தல்களை தமிழ் மக்கள் எதிர்நோக்க வேண்டிய சூழல் வரப்போகிறது.
இதேவேளை முன்னாள் போராளிகளை கைது செய்யக்கூடிய ஆபத்துகள் வரலாம்.
புலம்பெயர் நாடுகளில் இருக்க கூடிய விடுதலைப்புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அல்லது தடை நீக்கப்பட்ட அமைப்புகளுக்கு மீண்டும் விசாரணை என்று வரலாம்.
மக்களுக்கு கையளிக்கப்பட உயர் பாதுகாப்பு வலயங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இது தெரிந்தும் ஏன் இந்தியா இப்படி ஒரு அறிப்பை வெளியிட்டது. பழ.நெடுமாறன் தான் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்.
எமக்கு பழ.நெடுமாறனில் சந்தேகம் என்னவென்றால் வட்டுக்கோட்டை இரண்டு என்ற தீர்மானத்தையும் இராணுவ நோக்கில் தான் பார்த்தார். அந்த இரண்டு என்ற தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
தொடர்ந்து 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கில் இப்போது இப்படி சொல்கிறார்.
எனவே இந்த அறிவிப்பு பல்வேறு விதமான இன்னல்களுக்கும்,இராணுவ நெருக்கடிகளுக்கும், புலம்பெயர் மக்களுக்கான விசாரணைகளுக்கும் இது வழிவகுத்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட போவது ஈழத்தமிழர்களும்,புலம்பெயர் தமிழர்களும் தான் எனவே தமிழ் மக்களை பொறுத்தவரையிலே இந்த கருத்து ஒரு அச்சமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.