ரணிலின் சாம்ராஜ்யத்தை உடைக்க திணறும் பசில் இராஜதந்திரம்

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Namal Rajapaksa Ranil Wickremesinghe
By Dharu Mar 29, 2024 07:32 AM GMT
Report

அரகலய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய மொட்டு அணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) இலங்கை அரசியலில் புதிய இராஜதந்திர நகர்வை ஆரம்பிக்க நாடு திரும்பியுள்ளார்.

தான் கட்டமைத்த கோட்டையை ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe)இருந்து மீட்கவே இந்த வருகை புலப்படுவது சாமானியன் விளங்கிக்கொள்ளும் சாட்சியமாக மாறிவிட்டது.

ஆனால், பசிலின் நகர்வோ ரணிலின் புதிய சாம்ராஜ்யத்தை உடைக்க முடியாத நிலையில் உள்ளது.

ரணிலின் புதிய நகர்வால் அதிர்ச்சியில் இந்திய RAW

ரணிலின் புதிய நகர்வால் அதிர்ச்சியில் இந்திய RAW

தந்திர அரசியல்

காரணம் பசிலிடம் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் தற்போது ரணிலின் அசைவுக்கு ஆடிக்கொண்டிருப்பதே.

சில கூட்டம் தெரிந்தே ஆடினாலும் சில கூட்டம், தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக புரிந்து ஆடுகிறது.

https://tamilwin.com/article/lead-for-precedent-ranil-basil-war-sl-1711694286

ஒருகாலத்தில் பசிலின் தரப்பால் பகிரங்கமாக வெளியேற்றப்பட்ட ரணில் இன்று இலங்கையின் அரியாசனத்தை தக்கவைத்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தனது இருப்பை மேலும் 5 வருடம் தக்கவைத்துக்கொள்ள நரியின் தந்திரம் போன்ற அரசியலை செய்பவர் என உவமிக்கப்படும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது காய் நகர்த்தல்களை ஆரம்பித்துவிட்டார்.

நாடாளுமன்றில் இருந்தும் பதவியில் இருந்தும் வெளியேற்றப்பட்டோம் என்ற வஞ்சகம் மனதுக்குள் இருந்தாலும், ரணிலின் எதிர்கால திட்டத்திற்கு ஆணிவேறிட பசிலின் ஆதரவு தேவை படுவது என்னவோ நிதர்சனம்தான்.

சம்பந்தனின் ஆசை இதுவே!...கனடா மக்களுக்கு அநுர கூறிய செய்தி

சம்பந்தனின் ஆசை இதுவே!...கனடா மக்களுக்கு அநுர கூறிய செய்தி

பொருளாதார வீழ்ச்சி கண்ட இலங்கை

இப்போது தனது சாம்ராஜ்யத்தை காப்பாற்ற வாக்கு தேவைப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சி கண்ட இலங்கையில் அரியசானத்திற்கான தேர்தல் நகர்வுகள் ஆரம்பித்துவிட்டன.

குப்பைக்கூடைக்குள் தூக்கி எறியப்பட்ட இலங்கையின் உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னால், நடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அரியாசன போட்டிக்கான ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

https://tamilwin.com/article/lead-for-precedent-ranil-basil-war-sl-1711694286

எவ்வாறாயினும் ரணிலே அரியாசனத்தில் ஆட்சி செய்யும் சிங்க கொடி ஏந்திய நாட்டிற்கு தலைவனாக போகிறார் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சி ஆசனத்திற்கான போட்டியே தற்போது பொதுத் தேர்தல் வடிவில் நடக்கவுள்ளது. சுதந்திர இலங்கையில் தற்போது மத முரண்பாடானது தலைதூக்கியுள்ளது.

இந்த விடயமானது ஜனாதிபதி தேர்தலுக்கு அசாதாரணமான விடயமாக பார்க்கப்பட்டது. பெரும்பான்மை வாக்குகள் இலங்கையில் குவிந்துகிடந்தாலும் ஆட்சியை தீர்மானிப்பதென்னவோ சிறுபான்மையினரின் வாக்குகளே.

ராஜபக்சர்களுடன் அரசியல் மோதல் தீவிரம்

ராஜபக்சர்களுடன் அரசியல் மோதல் தீவிரம்

யாழில் ரணில்

அதை தக்கவைத்துக்கொள்ளவே இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தந்திர அரசியலின் நகர்வாக யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

https://tamilwin.com/article/lead-for-precedent-ranil-basil-war-sl-1711694286

காணி விடுவிப்பு, வைத்தியசாலை திறப்புவிழா என கூறினாலும், அங்கு இடம்பெற்றிருப்பது என்னவோ தேர்தல் முன்னாயத்த அரசியல் பிரச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கையின் சிவப்பு சகோதரர்கள் என அடைமொழியிடப்படும் அனுர தரப்பு தனது சதுரங்க ஆட்டத்தில் காய்களை நிதானமாக நகர்த்தி வருகிறது.

இந்திய விஜயம் முடிந்து, வடக்கில் காலடியெடுத்துவைத்த அவர்கள் தற்போது கனடாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். அரகலயவின் பின்னர் அனுர தரப்புக்கு இலங்கையில் வாக்கு வங்கி கடந்த காலங்களிலும் பார்க்க அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாய் உள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தாலும் தமிழரின் வாக்குகளை பெறுவதே அவர்களின் நோக்கமாக காணபடுகிறது. அதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவென்பது அனுர தரப்புக்கு அவசியமாகிவிட்டது.

அதற்கான ஆணிவேராகவே கனடா விஜயம் பார்க்கப்படுகிறது. ஆனால் சஜித் பிரேமதாசாவின் நடவடிக்கைகள் இதுவரை தேர்தல்மயப்படவில்லை. இதனடிப்படையில் இன நல்லிணக்கம் இலங்கையில் சிறுபான்மையினருக்கு பெரும் துயராகவே மாறிவருகிறது.

நாடாளுமன்றத்தை கலைத்தால் ரணிலுக்கு காத்திருக்கும் நெருக்கடி

நாடாளுமன்றத்தை கலைத்தால் ரணிலுக்கு காத்திருக்கும் நெருக்கடி

சிவப்புத்துண்டு நாமலுக்கு

வடக்கு கிழக்கில் தமிழரின் நில ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் என்பன தொடரும் விடயமாக காணப்படுகிறது. போராட்டங்களும், உரிமைகோரல்களும் மக்களால் தொடரப்பட்டாலும் அவை, கண்டன அறிக்கைகளுடன் முற்றுபெற்றுவிடுகின்றன.

https://tamilwin.com/article/lead-for-precedent-ranil-basil-war-sl-1711694286

அதன் அடுத்தகட்டமாக பார்த்தால் வலை வீசியவரிடமே சிக்குவதை போல் மோடி அரசாங்கத்தை தலையிடக்கோரி இந்தியாவிற்கு பறக்கும் கடிதங்கள். இவை மாத்திரமே நிரந்தர தீர்வு எனும் தமிழரின் மொழிகளுக்கான பதிலாகிவிடுகின்றன.

அண்மையில் இடம்பெற்ற வெடுக்குநாறி விவகாரத்தை இங்கு சுட்டிக்காட்ட கூடியதாய் இருக்கும் இதற்கான உதாரணமாக. இலங்கை அரசியல்வாதிகளுக்கும் அரசியல் வெற்றிகளுக்கும் ஜனநாயகம் என்பதை தாண்டிலும் மதவாதம் என்பது அடிப்படைடையாகிவிட்டது.

பெரும்பான்மையினரின் வாக்குகளைப்பெற போட்டியாளர்கள் மகாநாயக்க தேரர்களிடம் ஆசிகளை பெறுகின்றனர்.

இதன் பின்னால் உள்ள அரசியல் என்பது மகாநாயகர்களின் வாக்குகள் எதை நோக்குகிறதோ அதுவே பெரும்பான்மையினரின் வாக்குகளாக மாறுகிறது.

மேலே சுட்டிக்காட்டிய விடயத்தின் அடுத்தகட்டம்தான் மதரீதியான தாக்குதல். இதுவே 2019 கோட்டாபய ராஜபக்சவின் ஆசனத்திற்கு வித்திட்டது என குற்றச்சாட்டுகளும் தொடர்கின்றன.

https://tamilwin.com/article/lead-for-precedent-ranil-basil-war-sl-1711694286

இலங்கையில் இடம்பெற்ற அந்த கோர உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது பலநூறு மக்களின் உயிர்களை காவுகொண்டது. இதற்கு உரிமைகோரிய சஹ்ரான் ஹாசிம் தரப்பானது தாக்குதலுக்கான காரணத்தை ஒரு காணொளிமூலம் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த தாக்குதலின் விசாரணைகள் இலங்கை தரப்புக்கு மாத்திரமல்லாது சர்வதேசத்தின் தலையீட்டுக்கும் வழிவகுத்தது. முடிவில் சனல்4 ஆவணப்படம்.

இந்நிலையில் சனல்4 ஆவணப்படத்தில் மதவாத அரசியல் செய்பவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட பிரதான தரப்பான ராஜபக்சக்களின் இந்த கால அரசியல் போக்கு பதவியை தக்கவைப்பதிலும் தாண்டி, நிலையான கட்சியை வடிவமைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

அதன் ஆரம்பக்கட்டமே பசில் ராஜபக்சவின் கழுத்தில் தொங்கிய சிவப்புத்துண்டு இன்று நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa) சூட்டப்பட்டுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US