செளபாக்கியா உற்பத்தி கிராம களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Mannar Gotapaya rajapaksa Manthai Gather masthan
By Independent Writer Jul 15, 2021 09:43 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் எண்ணக்கருவில் உருவான செளபாக்கியா செயற்திட்டத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் சௌபாக்கியா உற்பத்தி கிராம களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் பல்வேறுபடட பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.

மன்னார்

மன்னர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பெரிய மடு கிராமத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறுள்ளது.

இவ்வடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக 11.4மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரான்லி டிமெல் , மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமாரன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன், திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சங்கானை

 சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் வறுமை ஒழிப்பு செயற்றிட்டமானது, நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அங்கஜன் இராமநாதனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உற்பத்தி கிராமத்தில் ஏற்கனவே பால் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் அந்த உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபா அங்கஜன் இராமநாதனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சங்கானை பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர், அப் பிரிவு கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், குறித்த பால்ச்சங்க பொது முகாமையாளர், கால்நடை வைத்தியர், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிறிவிற்குட்பட்ட வாகரை கட்டுமுறிவு கிராமத்தை உற்பத்திக் கிராமமாக வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மண் வளமும், நீர் வளமும், அப்பகுதியில் ஒருமித்துக் காணப்படுவதனால் கௌப்பி, நிலக்கடலை போன்ற பயிர் செய்கைகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் அங்குள்ள மக்கள் முன்னெடுத்துள்ளார்.

இதன் போது பாரிய அளவான உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்குச் சௌபாக்கிய திட்டத்தின் மூலமாக நீர் இறைக்கும் இயந்திரங்களையும் மேலும் சில கடன் உதவிகளையும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்திருந்தார்.

இவ்வாறான உள்ளூர் உற்பத்தி மற்றும் சுய பொருளாதாரத்தினை கட்டி எழுப்புவதன் மூலம் எதிர்காலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த ஒரு ஆரோக்கியமான வளமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US