சட்டமேதை கலாநிதி நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் காலமானார்
நீதிபதிகளையும்,சட்டத்தரணிகளையும் உருவாக்கிய சட்ட மேதை கலாநிதி திருமதி.நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளார்.
நீதிபதிகளையும்,சட்டத்தரணிகளையும் உருவாக்கிய சட்ட மேதை கலாநிதி திருமதி.நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் மரணமான செய்தி சட்ட சமூகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது இழப்பு பேரிழப்பு என இலங்கை சட்ட சமூகம் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.
வடக்கு,கிழக்கில் கடமையாற்றும் அனைத்து நீதிபதிகளும் அவரது மாணவர்களென்பது பெருமைக்குறிய விடயம். அத்துடன் வடக்கு, கிழக்கு, கொழும்பு, கனடா, லண்டன், அவுஸ்திரேலியாவில் வாழும் பெரும்பான்மையான சட்டத்தரணிகள் அவரது மாணவர்களாவர்.
கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம்,சட்டக்கல்லூரி மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளராகவும் பல ஆண்கள் கடமையாற்றியிருந்த நிலையில், அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்பதாகவும்,தமது இரங்கல்களையும் தெரிவித்துள்ளனர்.

ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri