சட்டமேதை கலாநிதி நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் காலமானார்
நீதிபதிகளையும்,சட்டத்தரணிகளையும் உருவாக்கிய சட்ட மேதை கலாநிதி திருமதி.நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளார்.
நீதிபதிகளையும்,சட்டத்தரணிகளையும் உருவாக்கிய சட்ட மேதை கலாநிதி திருமதி.நாகேந்திரா அவுஸ்திரேலியாவில் மரணமான செய்தி சட்ட சமூகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது இழப்பு பேரிழப்பு என இலங்கை சட்ட சமூகம் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.
வடக்கு,கிழக்கில் கடமையாற்றும் அனைத்து நீதிபதிகளும் அவரது மாணவர்களென்பது பெருமைக்குறிய விடயம். அத்துடன் வடக்கு, கிழக்கு, கொழும்பு, கனடா, லண்டன், அவுஸ்திரேலியாவில் வாழும் பெரும்பான்மையான சட்டத்தரணிகள் அவரது மாணவர்களாவர்.
கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம்,சட்டக்கல்லூரி மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளராகவும் பல ஆண்கள் கடமையாற்றியிருந்த நிலையில், அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்பதாகவும்,தமது இரங்கல்களையும் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan