“என்றோ ஒருநாள் உங்களால் இது நடக்கும்” ராஜபக்சக்கள் குறித்து லசந்தவின் கடிதம்
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்கவின் கடிதத்தை வாசிக்கும் போது கண்களில் கண்ணீர் வரும் என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்க இறப்பதற்கு முன்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு நெருக்கமாக இருக்கும் உங்களுடன் இருக்கும் எனக்கு என்றோ ஒருநாள் உங்களால் விபரீதம் நடக்கும் என்று அதில் லசந்த விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இனத்தின் ஊடகவியலாளரின் வழிகாட்டலின் பேரில் தான் ஒரு இனம் இயங்கும் என்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் இளையபாரதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..