பிரான்ஸில் தமிழ் வர்த்தக நிலையத்திலிருந்து பெருந்தொகை தங்கம் மீட்பு
பிரான்ஸில் தமிழர் வர்த்தகர் ஒருவரின் கடையொன்றில் பெருந்தொகை தங்கம், பணம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இரகசிய அறை ஒன்றுக்குள் இருந்து நேற்று முன்தினம் கிலோ கணக்கில் தங்கம் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு புகைப்பட கலையகம் ஒன்றின் பின் அறையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே அவர்கள் குறித்த கலையகத்தினை அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது தங்க ஆபரணங்கள், அதிக விலை கொண்ட இரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் €100.000 யூரோவுக்கும் அதிகமான ரொக்கப்பணம் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களின் உரிமையாளர் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதான இந்தியத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 11 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan