இலங்கையில் 76 ஆயிரத்தைத் தாண்டியது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை - இன்றும் 774 பேருக்கு தொற்று உறுதி
இலங்கையில் இன்றும் 774 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 76ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 715 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கோவிட் - 19 தொற்றில் இருந்து இதுவரை 69 ஆயிரத்து 411 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 614 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.