காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோகிறதா! ஆளும் தரப்பு விளக்கம்

Vavuniya Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Thileepan Jul 06, 2025 06:43 PM GMT
Report

அநீதியான முறையில் காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோக மாட்டாது. வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு காடழிப்பு தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (06.07.2025) இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "மக்களது கோரிக்கைக்கும், முறைப்பாட்டுக்கும் அமைய வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் உளள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள திரிவைத்தகுளம் என்ற பகுதியில் திட்டமிடப்பட்ட காடழிப்பு இடம்பெறுகின்றது என்ற முறைப்பாட்டுக்கு அமைய நான் நேரடியாக கலாபோகஸ்வேவ பொலிசார், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டோம். பாரியளவில் திட்டமிடப்பட்ட வகையில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.

அனுமதி  

இதன்மூலம் 35 - 40 ஏக்கர் காடு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. மகாவலி எல் வலய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களால் இது தொடர்பில் எந்தவித அனுமதியும் எவருக்கும் வழங்கவில்லை எனத் தெரிவித்தனர்.

காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோகிறதா! ஆளும் தரப்பு விளக்கம் | Land Issue Sri Lanka Npp Govt

அவர்களுக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் பொலிசாருக்கு முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். வனவளத் திணைக்களத்திடம் கேட்ட போது அவர்களும் அனுமதி வழங்கவில்லை என்றனர்.

வனவளத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையினர் இணைந்து இது தொடர்பாக பரிசோதனை நடத்தவுள்ளனர். ஒரு வாரத்திற்குள் இது தொடர்பான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், அதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறும் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

முன்னாள் அரசாங்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருடைய தலைமையில் இக் காடழிப்பு இடம்பெற்றதாக அப் பகுதி மக்கள் எமக்கு கூறியுள்ளனர்.

உரிய நடவடிக்கை 

இது தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இது தொடர்பில் எமது அரசாங்கம் தெளிவாகவுள்ளது. இந்த நடவடிக்கை இரண்டு வாரத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக நினைக்கின்றேன்.

காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோகிறதா! ஆளும் தரப்பு விளக்கம் | Land Issue Sri Lanka Npp Govt

பாரிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாது. இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கியுள்ளோம். எப்பொழுதும் மக்கள் நலன் சார்ந்தே எமது அரசாங்கம் செயற்படும். இங்கு இடம்பெற்ற முறைகேடான செயற்பாட்டுக்கு விரைவாக தீர்வு வழங்கவுள்ளோம்.

இதனை நாடாளுமன்றக் கூட்டத்திலும் தெரியப்படுத்தி வனவளத்துறை அமைச்சரிடம் நேரடியாக சமர்பித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோருவோம். மக்களுடைய காணிகள் எதுவாக இருந்தாலும் இவ்வாறு அநீதியான முறையில் கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோக மாட்டாது.

இதைப் பயன்படுத்தி பொருத்தமற்ற அரசியல் நடவடிக்கைகளை செய்வதை தவிர்க்க வேண்டும். எலலோரும் ஒன்று சேர்ந்து காடுகளை பாதுகாக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றால் உடனடியாக எமக்கு தெரியப்படுத்தவும். நாம் நடவடிக்கை எடுப்போம்” எனவும் தெரிவித்துள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, சுவிஸ், Switzerland, Maastricht, Netherlands

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US