வலிகாமம் மேற்கிலும் இராணுவத்திற்கு காணிகளை பாரதீனப்படுத்தும் நடவடிக்கைக்கு சிறீதரன் எம்.பி கடும் எதிர்ப்பு
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் தமக்கு காணியினை பாரதீனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணம் முழுவதும் காணிகளை இராணுவம், கடற்படை, விமானப்படை போன்றவை ஏற்கனவே கபளீகரம் செய்து வைத்திருக்கிறது.
முப்படையினருக்கு எவ்வித காணிகளையும் வழங்க அனுமதிக்க வேண்டாம் என்று விடாப்பிடியாக இருந்ததை தொடர்ந்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

