வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவர்களின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி சிலை திறப்பு விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலைகளை வடிவமைத்த சிற்பி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
சிலை திறப்பு விழா ஒத்திவைப்பு
அவர், இன்று (22.07.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதி்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலையாகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை திறப்பு விழாவை எதிர்வரும் 4ஆம் திகதிவரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

