குருந்தூர் மலை தமிழர் தரப்பு பொங்கல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
குருந்தூர் மலையில் இடம்பெறும் பொங்கல் வழிப்பாட்டை தடுக்க பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதிக்கோ அல்லது அருண் சித்தார்த்துகோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
குருந்தூர் மலையில் நாளை(18.08.2023) பொங்கல் வழிபாடு இடம்பெற்றால் இரண்டு குழுவினருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்த கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.
எனவே அந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும் என தெரிவித்து குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 106 (01)கீழ் முல்லைத்தீவு நீதிமன்றில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்து பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக தடை உத்தரவை கோரியுள்ளனர்.
கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்
புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளது.
அத்துடன் பொங்கல் வழிபாட்டை விகாரை அதிபதி சாந்தபோதி தேரரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ அருண் சித்தார்த் என்பவரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ தடுக்க எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் கட்டளை வழங்கியுள்ளது.
இதேவேளை குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தில் நாளை இடம்பெறவுள்ள பொங்கல் விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை தொல்லியல் திணைக்களம் கடிதமாக வழங்கியுள்ளது.







யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
