குருந்தூர் மலை விவகாரம் - செல்வராசா கஜேந்திரன் கண்டனம் - செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியிலுள்ள காணிகள் சிங்களவர்களுக்கு சொந்தமானது என பேராசிரியர் எல்லாவல மேதானந்த தேரர் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆமோதித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று (21.06.2023)நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியில் இருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்களவர்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டி காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
