குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்து: நகர சபை தலைவருக்கு விளக்கமறியல் மேலும் நீடிப்பு
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.நளீமை நாளை 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (09) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இருந்த போதும் கிண்ணியா நகர சபை தலைவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுகவீனம் காரணமாகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனைக் கருத்தில் கொண்டு பிணை வழங்குமாறு சட்டத்தரணி சார்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.