அரசுக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை! குமார் குணரத்தினம் சுட்டிக்காட்டு

Colombo Election Local government Election Local government election Sri Lanka 2025
By Rakesh May 12, 2025 09:56 AM GMT
Report

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகள் மூலம் மக்கள் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனால் மக்களின் எச்சரிகையைப் புரிந்துகொண்டு அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12.05.2025) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நுவரெலியா செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிவப்பு எச்சரிக்கை

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு நாட்டு மக்கள் சிவப்பு எச்சரிக்கை ஒன்றைடுத்திருக்கின்றனர். இந்தத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் எதுவும் இடம்பெறப்போவதில்லை. அதனால் கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசின் நடவடிக்கை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை மக்கள் வழங்க வேண்டும் என்றே போராட்ட அணியாகத் தெரிவித்து வந்தோம்.

அரசுக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை! குமார் குணரத்தினம் சுட்டிக்காட்டு | Kumar Gunathilaka Statement

தேர்தல் பெறுபேறுகளைப் பார்க்கும்போது மக்கள் எமது கோரிக்கைக்கு ஓரளவு செவிசாய்த்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசு கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தெரிவித்த விடயங்களை மறந்து புதிய தாராளவாத கொள்கையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. மக்கள் எதிர்கொண்டுள்ள வரிச் சுமையைக் குறைப்பதாகத் தெரிவித்த வாக்குறுதியை மறந்து நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் அதிகரித்துள்ளது.

பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதார உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி ஒரு சதமேனும் குறையவில்லை. மக்கள் விராேதமாக நாட்டின் பொருளாதாரச் சுதந்திரத்தை இந்தியாவுக்குக் காட்டிக்கொடுக்கும் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கின்றது. அந்த ஒப்பந்தங்களை இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை. இவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் கடுமையாக எதிர்த்து வந்த அரச அடக்குமுறையை இன்று போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து வருகின்றனர்.

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து - பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து - பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

அரசின் மீது இருந்த நம்பிக்கை

இவ்வாறான நிலைமையிலே இந்தத் தேர்தல் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி சகோதரர்கள் தேர்தல் மேடைகளில் கடந்த அரசுகளுக்கு எதிராக மேற்கொண்டு வந்த கடும் எதிர்ப்பு மற்றும் அரசியல் விமர்சனத்துடனே மக்கள் அவர்களின் பால் அணி திரண்டனர். என்றாலும் இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகளைப் பார்க்கும்போது அரசின் மீது இருந்த நம்பிக்கை இல்லாமல் போய் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அரசுக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை! குமார் குணரத்தினம் சுட்டிக்காட்டு | Kumar Gunathilaka Statement

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளைவிட இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 23 இலட்சம் வாக்குகள் குறைவடைந்துள்ளது. எனவே, இந்தத் தேர்தல் பெறுபேறு மூலம் மக்கள் வழங்கிய எச்சரிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு காரணங்களைத் தெரிவித்து அரசு மக்களின் எச்சரிக்கையைத் தட்டிக்கழிக்க முற்பட்டால் அதன் பாதிப்பு அரசுக்கே ஏற்படும்.

ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்திய மக்களை அழுத்தத்துக்கு ஆளாக்கும் நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையே அரசு முன்னெடுத்துச் செல்வதால், அரசின் மீது மக்களுக்கு விரக்தி ஏற்படுள்ளது. அதனால் நாட்டு மக்கள் வழங்கிய எச்சரிக்கையைப் புரிந்து கொண்டு, அவர்கள் வேகமாகப் பயணிக்கும் புதிய தாராளவாத வேலைத்திட்டத்தை மாற்றியமைக்க அரசுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

கோர விபத்தில் நடந்தது என்ன.....! நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சித் தகவல்

கோர விபத்தில் நடந்தது என்ன.....! நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சித் தகவல்

தீர்மானம் எடுக்கும்போது பொதுமக்களின் பால் இருந்து தீர்மானங்களை எடுப்பதற்கு தற்போதும் அரசுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கின்றோம்." - என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US