மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் குடு மங்கலிக்கா கைது
களனி பட்டிய வீதியில் வசித்து வந்த பெண்ணொருவர், 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இந்த பெண் விற்பனை செய்ய தயாராக வைத்திருந்த 800 பொதிகனை கொண்ட 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றிய இந்த ஹெரோயின் தொகையின் பெறுமதி 10 லட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடு மங்கலிக்கா என்ற 40 வயதான களுபாத்தகே மங்கலிக்கா என்ற இந்த பெண் நாளைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.