மொட்டு கட்சியின் முக்கியஸ்தரின் அநாகரிக செயல்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் டென்சில் பத்மசிறி, அநாகரிக செயல் புரிந்த குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (27.07.2023) இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் குழுவிற்கு தனது அந்தரங்க உறுப்புகளை காட்டி கேலி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மாநகரசபையின் மற்றுமொரு முன்னாள் உறுப்பினர் சமந்த பீரிஸ் என்பவர் வட்ஸ்அப் குழு மூலம் தகாத இடுகைகளைப் பகிர்ந்து அதிபரை துன்புறுத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதிபர் மற்றும் பெற்றோரின் முறைப்பாடு
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இதன்போது சமந்தா பீரிஸ், டென்சில் பத்மசிறியுடன் காவல் நிலையத்திற்கு சென்றிருந்தார்.
எவ்வாறாயினும், நிலையத்தை விட்டு வெளியேறும் போது வெலிக்கடை காவல்துறை சிற்றுண்டிச்சாலைக்கு வெளியே வைத்து, மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் டென்சில் பத்மசிறி தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டியதாக கூறி அதிபரும் பெற்றோரும் மீண்டும் முறைப்பாட்டை செய்தனர்.
இதனையடுத்து நேற்று (27.07.2023) சட்டத்தரணி ஊடாக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து டென்சில் பத்மசிறி கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam