கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! மேலும் இருவர் கொழும்பில் கைது..
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டிற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்றையதினம் குறித்த (13) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், அவர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரான பெண்ணுக்கு 32 வயது எனவும், அவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் இவர்களைத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணை
கடந்த 7ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16ஆம் ஒழுங்கைப் பிரதேசத்தில் குறித்த துப்பாக்கிசூடு இடம்பெற்றது.

விசாரணைகளின்போது, கொல்லப்பட்டவர் குற்றக் கும்பல் உறுப்பினரான 'பூகுடு கண்ணா' என்ற பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam