யாழில் பெண் உட்பட நான்கு தமிழர்களை சிக்க வைத்த முக்கிய ஆதாரம்.. பின்னணியில் பல அதிர்ச்சி தகவல்கள்!
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு (07.11.2025) 43 வயதான நபரொருவர் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் வரை நீண்டு செல்லும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அதாவது, கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூட்டினை நடத்திய மூவர் இன்றையதினம் (08.11.2025) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார், கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிதாரிகள் குறித்த காரை பஞ்சிகாவத்தை பகுதியில் விட்டுவிட்டு நீர்கொழும்பு சென்று அங்கு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது, காரில் இருந்த GPS தொழில்நுட்பத்தை வைத்து பொலிஸார் அவர்களை கண்டுபித்துள்ளனர்.
குறித்த காரில் நாய் குட்டி ஒன்றுடன் இருந்த பெண்ணொருவரும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
இவை தொடர்பில் எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாக ஆராய்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan