4 வருடங்களுக்கு பின்னர் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட சந்தை!
கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்முனை தென்மேற்கு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கொக்கொட்டிசோலை பொதுச் சந்தையானது கடந்த நான்கு வருடங்களாக இயங்காத நிலையில் காணப்பட்டு வந்ததுள்ளது.
பொதுச் சந்தை
கடந்த 4 வருடங்களுக்கு பின்பு புதிய அரசாங்கத்தினால் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினூடாக புது வருடத்தை முன்னிட்டு இந்த பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக நிரந்தரமான ஒரு பொதுச் சந்தை வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர் இவ்விடயம் சம்பந்தமாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு வந்திருந்துள்ளனர்.
இதனையடுத்து தமிழர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் விழா போது தேவையான அத்தியாவசிய பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri