கொச்சிக்கடை தேவாலயத்தில் வழிபட சென்ற நபரின் மோசமான செயல்! வெளியான சிசிடிவி காணொளி
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பெறுமதி மிக்க மடிக்கனிணிகள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
நேற்றையதினம் மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்தில் வழிபடுவதற்கு வருகைத் தந்த மற்றுமொரு நபரின் பெறுமதி மிக்கப் பொருட்களே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளன.
வெளியான சிசிடிவி காணொளி..
மேலும், சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
இதன்போது, இரண்டு மடிக் கனிணிகள், ஒரு மதர் போர்ட், பெறுமதிமிக்க ஒரு தொலைபேசி, கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பணப்பை உள்ளிட்டவை இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளன.
ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து கொள்பவர் போல வந்த சந்தேகநபரே இவ்வாறு பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
குறித்த பொருட்களின் உரிமையாளர், தனது பையினை இருக்கையில் வைத்துவிட்டு வழிபடுவதற்காக பலிபீடத்தை நோக்கிச் சென்ற போது இதனை அவதானித்த சந்தேக நபர் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார்.
சிசிடிவி காணொளியின் துணையுடன் சந்தேநபர் திருடிச் செல்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொருட்களின் உரிமையாளர் கோரி நிற்கிறார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam