கிண்ணியா பிரதேச சபை மற்றும் நகர சபைக்கான தவிசாளர் தெரிவு..!
கிண்ணியா பிரதேசசபையின் தவிசாளராக அப்துல் ரவூப் முஹம்மத் அஸ்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் தவிசாளர் தெரிவானது இன்று (17)சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.
குறித்த உள்ளூராட்சி சபையில் மொத்தமாக 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 03 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 05 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப் தேசிய காங்கிரஸ் சார்பில் ஒருவரும் நல்லாட்சி தேசிய முன்னணி ஒருவரும் தலா ஒருவரும் அடங்குவர் .
கிண்ணியா நகர சபை
மேலும், கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவானது இன்று (17)நகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எம்.மஹ்தி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக எம்.எம்.மஹ்தி தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுட்பினர் அப்துல் அஸீஸ் தெரிவு செய்யப்பட்டார்.
மொத்தமாக 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 04 உறுப்பினர்களும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 03 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ,பொதுஜன ஐக்கிய முண்ணனி சார்பில் தலா ஒருவரும் அடங்குவர்.


300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
