கிண்ணியா பிரதேச அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வு ஒன்று கூடல்
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வு ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஒன்று கூடலானது நேற்று (26) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அபிவிருத்தி திட்டங்கள்
இந்த பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வு விளக்க உரை கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜிப்னால் எடுத்துரைக்கப்பட்டது.
இதன்போது திருகோணமலை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.விஜயதாசன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி மற்றும் கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.