கிண்ணியா பிரதேசசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) வசமுள்ள கிண்ணியா பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 12 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.
பிரதேச சபைத் தவிசாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), தேசிய முன்னணி நல்லாட்சிக்கான (NFGG) மற்றும் தேசிய காங்கிரஸ் (NC) உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
அமர்வில் கலந்து கொண்டவர்கள்
கிண்ணியா பிரதேச சபையின் மொத்த உறுப்பினர்கள் 14 பேரும் இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் அங்கம் வகித்த இரு உறுப்பினர்களில், ஒருவர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.
அங்கீகாரம்
மற்றொரு உறுப்பினர், வாக்கெடுப்பு நடைபெறும் போது சபையை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியானது, அடுத்த ஆண்டிற்கான அபிவிருத்தி மற்றும் நிதி நிர்வாகத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை கிண்ணியா பிரதேச சபைக்கு வழங்கியுள்ளது.





