கிண்ணியா - சமாவாஜதீவு கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாவாஜதீவு கிராம சேவகர் பிரிவில் நேற்று (28) அதிகாலை இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா -6, சமாவாஜதீவு பகுதியைச் சேர்ந்த, முகைதீன்வாவா கலீமுள்ளா (வயது 26), அப்துல் அஜீஸ் அஸீம்(வயது 19) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை குற்றத்தை இருவரும் இருவரும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இன்றைய தினம் ( நவம்பர் 29) சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கிண்ணியா - சமாவாஜதீவு பிரதேசத்தைச் சேர்ந்த, 28 வயதான சு. பர்சாத் என்பவர், நவம்பர் 28ஆம் திகதி, அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri