பிரான்ஸை முற்றுகையிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்! மன்னர் சார்லஸ் பயணத்தில் திடீர் மாற்றம்

France King Charles III
By Jenitha Mar 24, 2023 06:54 PM GMT
Report

பிரான்சில், ஒய்வூதிய திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது பிரான்ஸ் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

பிரான்சில் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒய்வூதிய திட்டத்தை அரசு நிர்வாகம் நடைமுறைப்படுத்தியது. இதற்கு அரசு ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பயணத்திட்டம் ஒத்திவைப்பு

பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவம் பதிவாகி வருகின்றது. இதனால் அரச நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் அரச முறைப்பயணமாக பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மார்ச்26 முதல் 28 வரை பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்தார்.

பிரான்ஸை முற்றுகையிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்! மன்னர் சார்லஸ் பயணத்தில் திடீர் மாற்றம் | King Charles S France Pension Protests

தற்போது அவரது பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக பிரித்தானிய அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் வகையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து உள்ளன. நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து அவர்கள் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறைகளும் வெடித்தன. பாரீசில் நடந்த பேரணியின் போது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பலகைகள் மற்றும் குப்பை குவியல்களுக்கு தீ வைத்தனர்.

பிரான்ஸை முற்றுகையிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்! மன்னர் சார்லஸ் பயணத்தில் திடீர் மாற்றம் | King Charles S France Pension Protests

தீவிரமடைந்த போராட்டம் 

சாலையோரம் இருந்த பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் கறுப்பு உடைகள் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகள், வங்கிகள், துரித உணவகங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் அதன் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஆனது. இதையடுத்து பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள்.பொலிஸாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 123 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைநதுள்ளனர்.

இதனால் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் மேலும் தடியடியும் நடத்தினார்கள். இதனால் போராட்டக் காரர்கள் சிதறி ஓடினார்கள். இது தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பல்வேறு இடங்களில் தொடரூந்து மறியல் போராட்டங்களும் நடந்தன. இதனால் தொடரூந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிவேக தொடரூந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கூடுதல் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். பிரான்சில் இதுவரை இல்லாத அளவு நடந்த இந்த போராட்டம் அந்நாட்டு அதிபருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US