அமொிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் இடம்பெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தின்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருந்து நடைபெற்ற வீட்டில் அதிகாலை 1 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விருந்து நடைபெற்ற வீட்டில் 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேரின் உடலங்களை மீட்டனர்.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.