கிளிநொச்சி விவசாயிகள் போராட்டம்(Video)
நெல்லுக்கான விலையை உரிய நேரத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளால் இன்றைய தினம்(28.06.2023) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமானது.
கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மனு கையளிப்பு
நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து.
நெல்லுக்கான நிர்ணய விலையை பெற்றுத்தருமாறும் தமது நெல்லை கொள்வனவு செய்யுமாறும் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 48 தொடக்கம் 50 ரூபாய்கே நெல் கொள்வனவு நடைபெறுவதாகவும்,
தமக்கு அறுவடை முடிவில் செலவீனமே 85 ரூபாய் முடிவடைவதாகவும் விவசாயிகள்
தெரிவித்துள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினர் அவர்களின் களஞ்சியசாலைகள் அனைத்துமே வெறுமனே
காணப்படுவதாகவும், இருப்பினும் நெல் கொள்வனவு உரிய காலத்தில் உரிய விலையில்
கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஶ்ரீமோகனிடமும், நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
மேலதிக தகவல்-எரிமலை







எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
