விசமிகளால் குறிவைக்கப்படும் கண்டாவளை கமநல சேவை நிலையம்(Video)
கிளிநொச்சி கண்டாவளை கமநல சேவை நிலையத்தில் உள்ள சில பொருட்களுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை கமநல சேவை நிலையத்தில் நேற்றைய தினம் அலுவலக கடமைகள் முடித்து அலுவலகம் பூட்டப்பட்ட பின்னர் அங்கிருந்த கதிரை மற்றும் ஆவணங்கள் சிலவற்றிற்கும் விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
அலுவலகத்தில் தீ எரிவது தொடர்பில் அவதானித்த கடமைக்கு வந்த காவலாளி சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிக்கு தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாக தீ அணைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே குறித்த கமநல சேவை நிலையத்தின் பெயர்கலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம் கற்கள் மற்றும் வெற்றுப் போர்த்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri