கிளிநொச்சி புதிய பேருந்து நிலைய மலசலகூட கழிவு நீரால் பயணிகள் அசௌகரியம்
கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தின் மலசல கூடத்தின் கழிவு நீர் பயணிகள் பயன்படுத்தும் நடைபாதைகளில் வெளியேறி நிற்பதனால் பயணிகள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையம் கடந்த 28.03.2023 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பேருந்து நிலையத்தில் மலசல கூடம், குளியலறை என பல வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டபோதும் ஐந்து மாதங்களில் முகம் சுழிக்குமளவுக்கு மாறிவிட்டது என பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பயணிகள் விசனம்
சில பயணிகளின் பொறுப்பற்ற பயன்பாடு மற்றும் முறையான பராமரிப்பு இல்லாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலசல கூடத்தின் கழிவு நீர் பயணிகளின் பாதைகளிலும் அவர்கள் பயன்படுத்தும் இடங்களிலும் வெளியேறி காணப்படுவதனாலும், மலசல கூடங்கள் முறையான பராமரிப்பு இன்மையாலும் அவை சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






