முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியிலிருந்து அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றம் (Photo)
முல்லைத்தீவு - அம்பகாமம், தச்சடம்பன் மற்றும் கிளிநொச்சி - முகமாலை, ஆனையிறவு ஆகிய பிரதேசங்களில் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனம் நேற்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது ஈடுபட்டு வருகின்றது.

அபாயகரமான வெடிபொருட்கள்
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முல்லைதீவு மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் இதுவரை 2135156 சதுரமீற்றர் பரப்பளவில் 33825 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்
அம்பகாமம் பகுதியிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.




பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri