சிறுநீரக விற்பனை மோசடி: மற்றுமொரு சந்தேகநபர் கைது - செய்திகளின் தொகுப்பு
பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் மேலும் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர் 2 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றே, வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாக பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,