தென் ஆசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை பொலனறுவையில் அங்குரார்ப்பணம்
தென் ஆசியாவின் மிகப் பெரிய சிறுநீரக வைத்தியசாலை பொலனறுவையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீனத் தூதுவர் க்யூ ஸின்ஹொங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டது.
ஆயிரத்து இருநூறு கோடி ரூபா செலவில் இந்த வைத்தியசாலையில் நிர்மானிக்கபபட்டுள்ளது.
200 படுக்கைகள், இரத்த சுத்திகரிப்பு செய்யும் 100 படுக்கைகள், ஐந்து சத்திரசிகிச்சை கூடங்கள், அதி நவீன இரண்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பன இந்த வைத்தியசாலையில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீன அரசாங்கத்தின் அனுசரணையில் இந்த வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam