தென் ஆசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை பொலனறுவையில் அங்குரார்ப்பணம்
தென் ஆசியாவின் மிகப் பெரிய சிறுநீரக வைத்தியசாலை பொலனறுவையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீனத் தூதுவர் க்யூ ஸின்ஹொங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டது.
ஆயிரத்து இருநூறு கோடி ரூபா செலவில் இந்த வைத்தியசாலையில் நிர்மானிக்கபபட்டுள்ளது.
200 படுக்கைகள், இரத்த சுத்திகரிப்பு செய்யும் 100 படுக்கைகள், ஐந்து சத்திரசிகிச்சை கூடங்கள், அதி நவீன இரண்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பன இந்த வைத்தியசாலையில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீன அரசாங்கத்தின் அனுசரணையில் இந்த வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri