தென்னிலங்கையில் பெரும் துயரம் - முச்சக்கரவண்டியிலிருந்து வீசப்பட்ட சிறுவன் பலி
பாணந்துறையில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சிறுவன் அதிலிருந்து தூக்கி எறியப்பட்டு பேருந்தின் கீழ் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா மாவத்தையை சேர்ந்த 3 வயதான நெதுசா தட்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுவன் நேற்று மதியம் மாலமுல்ல பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டி விபத்து
இதன்போது சிறுவனுடன் மேலும் சிறுமியும் மற்றொரு 10 வயது சிறுவனும் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக கூறப்படுகிறது.
பாணந்துறை ருக்காஹ பகுதியில் பயணிகளை இறக்கிவிடுவதற்காக ஒரு பேருந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்தில் பேருந்தின் பின்னால் வந்த ஒரு லொறி பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
சிறுவன் பலி
அப்போது, பேருந்திற்கு எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் பிரேக் போட்டதால், முச்சக்கர வண்டியில் இருந்த சிறுவன் அதிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் எதிரே வந்த பேருந்தில் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 4 மணி நேரம் முன்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri
