இலங்கை கிரிக்கட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை குழுவிலிருந்து முக்கிய வீரர் விலகல்
இலங்கை கிரிக்கட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவிலிருந்து முன்னாள் நட்சத்திர வீரர் ரொசான் மஹானாம பதவி விலகியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முத்தையா முரளீதரன், குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா மற்றும் ரொசான் மஹானாம ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தக் குழுவிலிருந்து விலகுவதாக ரொசான் மஹானாம எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கட்டுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற காரணத்தினால் தாம் ராஜினாமா செய்வதாக எவரும் பிழையாக விளங்கிக்கொள்ள கூடாது எனவும், தாம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும் ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri