மண்ணெண்ணை அடுப்பு கவிழ்ந்து கர்ப்பிணி பெண் ஒருவர் பலி
மண்ணெண்ணை அடுப்பு கவிழ்ந்து கர்ப்பிணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் காணப்படும் எரிவாயு அடுப்பினை பயன்படுத்துவதற்கு அஞ்சி குறித்த பெண் மண்ணெண்ணை அடுப்பில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உணவு சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு கவிழ்ந்து உடலில் தீப்பற்றிக் கொண்டதனால் குறித்த கர்ப்பிணிப்பெண் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், கடந்த 31ம் திகதி இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளார். விபத்திற்கு உள்ளாகிய பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடலில் தீப்பற்றிக்கொண்டதனால் உடல் உறுப்புக்களில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் இந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்தார் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
