பெற்றோலுடன் கலக்கப்படும் மண்ணெண்ணெய்! ஜே.வி.பி குற்றச்சாட்டு
தற்போது இலங்கைக்கு தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சில காலமாக இலங்கைக்கு 92 ஒக்டேன் பெற்றோல் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தற்போது ஒக்டேன் 91 ரக பெற்றோல் மாத்திரமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அந்த வகை பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.