மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா கடத்தி சென்ற சந்தேகநபர் கைது(Photos)
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா கடத்தி சென்ற சந்தேகநபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் புத்தளம்-
அனுராதபுரம் வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி
சோதனையிட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 கிலோகிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர் நாகவில்லுவ பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிவான் முன்னிலை
இதேவேளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகள் மற்றும் சந்தேகநபரினை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


