மதுபான விலையை குறைக்குமாறு கெமுனு விஜேரத்ன கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Videos)
இந்த நாட்டில் போசாக்கின்மை தொடர்பில் கவனம் செலுத்தி மூன்று வேளை உணவு வழங்க வேண்டுமாயின் மதுபானசாலைகளை மூட வேண்டும் அல்லது மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பகல் முழுவதும் உழைக்கும் மக்கள் மாலையில் சிறிதளவு மதுபானம் அருந்துவது வழக்கமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மதுவின் விலை உயர்வால் மது அருந்திவிட்டு வீடுகளுக்கு கொண்டு செல்ல பணம் இல்லை எனவும் இதனால் குடும்பத்திற்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam