அநுர அரசின் அதிரடி - முன்னாள் அமைச்சரின் பெருந்தொகை பணத்துடன் வங்கி கணக்குகள் முடக்கம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் 2 வங்கி கணக்குகள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 20 மில்லியன் பணத்துடன் நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்பாக இரண்டு கணக்குகளும் ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் தகவல்களின் பின்னர் இந்த இடைநிறுத்தம் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணைகுழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஏனைய உறவினர்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக முடக்கப்பட்டன.
நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதியன்று, தனியார் வங்கியொன்றில் வைத்திருந்த 97.125 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிலையான வைப்புத்தொகை மற்றும் காப்புறுதிக் கொள்கைகளை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அவை கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகனுக்கு சொந்தமான ஆயுள் காப்புறுதிகளாகும்.
இந்த உத்தரவு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri