இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறும் கட்டுநாயக்க விமான நிலையம்
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வரும் சுற்றுலா பயணிகளால் நாட்டிற்கு அபாயமிக்க நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வைத்திய சங்கம் கோவிட் தடுப்பு குழு யோசனை முன்வைத்துள்ளது.
அனைத்து பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே PCR பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனையின்றி பயணிகளை நாட்டிற்குள் அனுமதித்தால் ஒமிக்ரோன் வைரஸ் நாட்டிற்குள் ஏற்படுவதனை தடுக்க முடியாதென இலங்கை வைத்திய சங்கத்தின் கோவிட் தடுப்பு குழு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.